🌸 இடைவிடா சகாய மாதா திருவிழா வாழ்த்துக்கள்! 🌸

இடைவிடா சகாய மாதாவை வணங்கும் இந்த நன்னாளில், அன்னை நமக்கு இடையறாத துணையாக இருப்பதைக் கொண்டு பெருமைப்படுவோம். அன்னையின் நம்மீது கொண்டுள்ள பரிவும், நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்கும் அற்புத சகாயமும் எந்நாளும் நம்மை வழிநடத்தட்டும்.


✨ சுருக்கமான வரலாறு ✨

இடைவிடா சகாய மாதாவின் அற்புத ஓவியம், பைசன்டின் முறை ஓவியக் கலையைச் சார்ந்ததாக 15ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதென கருதப்படுகிறது. இது முதலில் கிரீட் தீவில் வணங்கப்பட்டு, பின்னர் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு தெய்வீக காட்சியொன்றின் மூலம், அன்னையின் ஓவியம் மக்களின் வணக்கத்திற்கு உரியதாக அமைக்கப்பட வேண்டுமென தேவதாய் அறிவித்தார்.

அந்த வரலாற்று தருணத்தில், இந்த ஓவியத்திற்கு “இடைவிடா சகாய மாதா” என்ற பெயர் வழங்கப்பட்டது. 1866ஆம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பியஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன், இந்த ஓவியம் ரோம் நகரில் உள்ள புனித அல்போன்ஸ் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

இன்றும், உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் இடைவிடா சகாய மாதாவை மிகுந்த நம்பிக்கையுடன் வணங்குகின்றனர்.


🙏 இடைவிடா சகாய மாதாவே, எங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் உங்கள் சகாயத்தால் பாதுகாத்தருளும்.

💐 திருவிழா வாழ்த்துகள்!

📍 புனித அந்தோனியார் ஆலயம், சுன்னாகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top