புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்

யாழ்.மறைமாவட்ட குருவும் கூழாமுறிப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் அன்புத் தாயார் திருமதி மரியாம்பிள்ளை வரவணிக்கம் அவர்கள் ஆடி மாதம் 11ஆம் திகதி நேற்றையதினம் சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம். ... See MoreSee Less
View on Facebook
பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் அகவை தினம் - 12.07.2026இன்றைய தினம் 12/7/2026 தனது 60 ஆவது பிறந்த நாளை நினைவுகூறும் எமது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களுக்கு மன்னார் மறைமாவட்ட திருஅவை திருநிலையினர் பொதுநிலையினர் அனைவர் சார்பாகவும் நல் வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.#மன்னார் #மகிழ்ச்சி #mannar #mannarbishop #bishopofmannar #அந்தோனிப்பிள்ளைஞானப்பிரகாசம் #birthday #birthdayannivesary #மறைமாவட்டஆயர் #DioceseofMannar ... See MoreSee Less
View on Facebook
அருட்தந்தை மை. நிக்சன் கொலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளும் ஆசீர்வாதமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம்.தங்களின் அர்ப்பணிப்புமிக்க ஆன்மீகப் பணியும், அன்பான வழிகாட்டலும் மேலும் பலரின் வாழ்வில் ஒளி பாய்ச்சித் தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரிவாராக.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!அன்புடன்,புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
Live ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
View on Facebook
மடு அன்னையின் ஆடித்திருவிழா திருப்பலி நேரடி ஒளிபரப்பு ... See MoreSee Less
View on Facebook
மருதமடு அன்னை திருத்தல நற்கருணை பெருவிழா || நேரலை || 01.07.2026 ... See MoreSee Less
View on Facebook
Photos from chunnakamantonys.org's post ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்றுள்ளார்.1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ... See MoreSee Less
View on Facebook
Photos from Marainathi Jaffna Diocese's post ... See MoreSee Less
View on Facebook
Photos ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
மல்லாகம் புனித இடைவிடா சகாய மாதா திருத்தலம் நற்கருணை பெருவிழா - 27.06.2026 ... See MoreSee Less
View on Facebook
அருட்தந்தை கிறிஸ்டி நிர்மலராஜன் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!நல் ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் உங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துகிறோம்.புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
அனைவருக்கும் இனிய சகாய மாதா திருவிழா நல்வாழ்த்துகள்! அன்னை மரியாவின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பங்களோடு நிறைவாய் தாங்குவதாக.(Happy Feast of Perpetual Help wishes to everyone! May Mother Mary's blessings bring all good things to your familபுனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.ாகம். ... See MoreSee Less
View on Facebook
185வது ஆண்டு நிறைவை நோக்கி... ✨இறையருளில் எமது பயணம் தொடர்கிறது... ... See MoreSee Less
View on Facebook
அருட்தந்தை யூட் அவர்களுக்கு,தங்களின் 9ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தல் விழாவையொட்டி எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் இறைவன் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தமக்கு அளித்து, தமது திருப்பணியை மேலும் பல ஆண்டுகள் சிறப்பாக மேற்கொள்ள அருள்புரிவாராக.அன்புடன்,புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top