புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்

View on Facebook
Photos from Holy Mary's post ... See MoreSee Less
View on Facebook
மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உரையாடல் நிகழட்டும்! - திருத்தந்தைமத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், உலகத் தலைவர்கள் "அமைதிக்காக பாடுபட வேண்டும்" என்றும் "ஆயுதங்கள் இல்லாமல் தீர்வுகளைத் தேட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.மசர்ச் 03, செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, "உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழி காண வேண்டும்" என்று வலியுறுத்தினார்."அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், அமைதிக்காக உழைப்போம், வெறுப்பைக் குறைப்போம்" என்று கூறிய திருத்தந்தை, அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களால் நிலைத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியாது" என்று குறிப்பிட்டார்.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட அண்மைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இஞ்ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் தனது கரிசனையையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.அப்போது, "நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல" என்று உறுதிப்படக் கூறினார் திருத்தந்தை ... See MoreSee Less
View on Facebook
பரிசுத்த பாப்பரசரை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..#PopeLeoXIV #ANURAKUMARADISSANAYAKEதிருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு​இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பரிசுத்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.​இத்தாலிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (02) வத்திக்கானில் வைத்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார். வத்திக்கானின் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மொன்சிஞ்ஞோர் மிஹைடா பிளாஜ் (Monsignor Mihăiță Blaj) அவர்களிடம் இந்த கடிதம் வழங்கப்பட்டது.பரிசுத்த பாப்பரசரை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..#PopeLeoXIV #ANURAKUMARADISSANAYAKE #LKA #SL #Srilanka #NewsFirstTamil ... See MoreSee Less
View on Facebook
நற்கருணை ஆராதனை| புனித அந்தோனியார் ஆலயம் சுன்னாகம் |நேரடி ஒளிபரப்பு ... See MoreSee Less
View on Facebook
🏵️ திருத்தந்தையின் வேண்டுகோள்!மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்கள் குறித்து, திருத்தந்தை14ஆம் லியோ அவர்கள், அருட்தந்தையர்களை உடனடியாக தேவாலயங்களின் கதவுகளைத் திறந்து, புனித ஜெபமாலை ஜெபிக்கவும், நற்கருணைக்கு முன் பணிவுடன் ஜெபிக்கவும் மக்களை அழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விசுவாசிகள் தங்கள் தேவாலயங்களுக்கு அல்லது அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யுமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.திருத்தந்தை உலகிற்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்: "மத்திய கிழக்கிலும், இப்போது உக்ரைன் மற்றும் கிரிமியாவிலும் போர்கள் மிகவும் தீவிரமாகிவிடும், மேலும் பரவும்.அவர்களைத் தடுக்கவும், உலகத்தை ஆண்டவருடைய கருணையால் நிரப்பவும், ஆட்சியாளர்கள் நன்மை, தீமை பற்றிய அறிவைப் பெறவும், உலக அமைதி மற்றும் அன்புக்காக ஒன்றினைந்து போராடவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு, அறிவூட்டவும் நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும். திருத்தந்தை,அருட்தந்தையர்களை இறை வழிபாடுகளை எளிமையுடனும், அன்புடனும் கொண்டாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது வேண்டுகோளை மீண்டும் கூறும் அவர், "ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் ஒன்றுபட்டு ஜெபியுங்கள், ஜெபியுங்கள், ஜெபியுங்கள். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருடைய பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பும்படி கடவுளிடம் ஜெபியுங்கள்!"மூன்று முறை இயேசு கற்பித்த ஜெபத்தையும், மூன்று முறை மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஜெபியுங்கள். கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை பூமிக்கு அனுப்பும்படியான ஜெபமாகும். முடிந்தால், இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இதைப் பரப்புவதற்கு நம் உதவியை கேட்டு எழுதுகிறார்:உலகம் முழுவதும் அமைதிக்காக:இன்றிலிருந்து இந்த ஜெபத்தைச் ஜெபிக்கவும், அதை மீண்டும் மீண்டும் செய்யவும், நாம் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறோம். மகா பரிசுத்த திரித்துவமே, சர்வ வல்லமையுள்ள இறைவனே, கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தமே, சாத்தானை அழித்து, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும்.மரியாளின் மாசற்ற இருதயமே, சாத்தானை நசுக்குவீராக, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும்.அதிதூதரான புனித மிக்கேலே! சாத்தானைச் சங்கிலியால் பிணைத்து, உலகம் முழுவதையும் அடக்கியாளுபவர்களின் சூழ்ச்சிகளை பயனற்றதாக்கி முடக்கும். ஆமென்!இந்த ஜெபத்தை ஒருமுறை சொல்லிவிட்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; இதனால் சிறிது நேரத்தில், பலரும் அதை ஜெபிப்பார்கள். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, ஜெபத்திற்கு வல்லமை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடவுள் உலகத்தை ஆசீர்வதிக்கட்டும். ... See MoreSee Less
View on Facebook
புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுன்னாகம் அந்தோனியார் பாலர் பாடசாலை கட்டட திறப்பு விழாவும் சிறப்பு திருப்பலியும்கடந்த 22.02.2026 ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வண ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருப்பலியின் பின்சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளியின் புதிய கட்டடம் ஆயர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வு எமது பங்குத்தந்தையும் முன்பள்ளி நிர்வாக தலைவருமான அருட்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளாரின் தலைமையில் இடம் பெற்றதோடு இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வண ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் அவர்களும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜே. ஏ. யேசுதாசன் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ... See MoreSee Less
View on Facebook
🔴வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாத்திருப்பலி ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
Photos from Marainathi Jaffna Diocese's post ... See MoreSee Less
View on Facebook
சுன்னை மண்ணின் குரு மணியே, கத்தோலிக்க மறையின் போதகரே, அமலமரித்தியாகிகள் சபையில் தம் நற்பணியால் ஆவணக்காப்பு பணிதனை சிறப்புடன் ஆற்றும் தங்களை பெற்ற மண் பெருமையுடன் வாழ்த்துகின்றது இந்த நாளில்.புனித அந்தோனியாரின் துணையும் மரியன்னையின் துணையும் என்றும் உங்களோடு இருக்க இறைவனை வேண்டுகின்றோம்.வாழ்த்துகின்றோம், இளையோர் யாம். ... See MoreSee Less
View on Facebook
"உண்மையான ஆசிரியர் உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டுகிறார்" திருத்தந்தை லியோ.திருத்தந்தை தனது செய்தியில்கே, "ஓர் உண்மையான ஆசிரியர் உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டுகிறார்" என்று தனது திருத்தூது மடலில் இருந்து பார்வையாளர்களுக்கு நினைவூட்டியுள்ளதுடன் மற்றவர்களை அவர்களின் ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்த இயேசுவுடனான உறவை வலுப்படுத்துமாறு கல்வியாளர்களை ஊக்குவித்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸின் அனாஹெய்மில் இடம்பெறும் 70வது துறவறக் கல்வி மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், "இந்த நிகழ்வு இறைவேண்டல், உருவாக்கப் பயிற்சி மற்றும் தோழமை மூலம் ஆன்மிகப் புதுப்பித்தலை வளர்க்கும்" என்று தான் நம்பிக்கைகொள்வதாகவும் கூறியுள்ளார்.பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இந்தச் சிறப்புச் செய்தியில், இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.துறவறக் கல்வியாளர்களின் முக்கிய பங்களிப்பை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை, நற்செய்தியைப் பரப்புவதிலும், இறைவனுடனான உண்மையான சந்திப்பைத் தூண்டுவதிலும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்."ஓர் உண்மையான ஆசிரியர் உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டுகிறார்" என்று தனது திருத்தூது மடலில் இருந்து பார்வையாளர்களுக்கு நினைவூட்டியுள்ள திருத்தந்தை, மற்றவர்களை அவர்களின் ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்த இயேசுவுடனான உறவை வலுப்படுத்துமாறு கல்வியாளர்களை ஊக்குவித்துள்ளார்.இளம் பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியையும் வழங்கியுள்ள திருத்தந்தை, குறிப்பாக திருநற்கருணை மூலம், கடவுளின் அன்பிற்கு தங்கள் இதயங்களைத் திறக்க அவர்களை அழைத்துள்ள அதேவேளை, இது வாழ்க்கையின் அனைத்து சவால்களிலும் வலிமையின் ஆதாரமாக உள்ளதாக விவரித்துள்ளார்.இறுதியாக அவர்கள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, அவர்களின் விசுவாசப் பயணத்தில் அவர்களுக்கு ஞானம், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை கிடைக்க வாழ்த்தியும், அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியும் தனது உரையை நிறைவு செய்துள்ளார். ... See MoreSee Less
View on Facebook
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா:கலந்து கொள்வோருக்கான அறிவித்தல்கள்!எதிர்வரும் 27 மற்றும் 28 ஆந் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 27ஆந் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பஸ்கள்; மற்றும் தனியார் பஸ்கள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.கச்சதீவுக்கான படகுச்சேவை, குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து எதிர்வரும் 27ஆந் திகதி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒருவருக்கான படகுப் பயணக் கட்டணம் 1200 ரூபாயாகும்.கச்சதீவுக்கு குழுவாக அல்லது தனியாக படகில் வருகை தரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். ... See MoreSee Less
View on Facebook
“பேதுருவின் தலைமைப் பீட திருவிழா”இன்றைய நாளிலே திருஅவை தூய பேதுரு திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறுகின்றது. நற்செய்தியிலே இயேசு தூய பேதுருவை திருச்சபையின் தலைவராக நியமிக்கின்றார். பேதுருவின் வழிவரும் திருத்தந்தையர்களால் இன்றும் எம் திருஅவை வழிநடத்தப்பட்டு வருகின்றது.இன்றைய உலகமயமாக்கல் திருஅவைத் தலைவர்கள் சிலரிடையே சில சலனங்களை ஏற்படுத்தினாலும் அவர்கள் சவால்களை வெற்றிகொண்டு இறையாசீரோடு தம் மந்தைகளை வழிநடத்த அவர்களுக்காக செபிப்போம். ... See MoreSee Less
View on Facebook
மனமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அழைப்பு!- திருத்தந்தையின் திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரை பிப்ரவரி 18, புதனன்று, உரோமை புனித சபீனா பேராலயத்தில் நிகழ்த்திய திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரையில், .தவக்காலத்தின் போது மனந்திரும்புதல் மற்றும் சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ"மக்களை ஒன்று திரட்டுங்கள்" என்ற இறைவாக்கினர் யோவேலின் அழைப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை லியோ அவர்கள், இன்றைய உலகில் தனிப்பட்ட மற்றும் கூட்டு மனமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்."விசுவாசிகள் தங்கள் பாவங்களை வெளிப்புற அடையாளமாக அல்ல, மாறாக தங்கள் சொந்த இதயங்கள் மற்றும் செயல்களின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சவால்கள் இருந்தபோதிலும், தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்று, புதுப்பித்தலை நாடும் விசுவாசிகளின் சமூகத்தை உருவாக்குவதற்கு தவக்காலம் ஒரு வலிமை வாய்ந்த காலமாக உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.கடந்த 1966-ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் திருப்பலியை வெளிப்படையாகக் கொண்டாடிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, அதை "கடுமையான மற்றும் குறிப்பிடத்தக்க தவக்கால விழா" என்று அழைத்தார்.சாம்பலை, போர், சுற்றுச்சூழல் சிதைவு மற்றும் நீதி இழப்பு உள்ளிட்ட உலகின் கலவரங்களின் நினைவூட்டலுக்கு ஒப்பிட்டுக்காட்டிய திருத்தந்தை, அதேவேளையில், நம்பிக்கை மற்றும் உயிர்த்தெழுதலையும் அடையாளப்படுத்தினார்.தவக்காலம் என்பது உள்நோக்கிப் பார்க்கவும், மனமாற்றத்தைத் தழுவவும், பாஸ்காவில் வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் இறுதி கொண்டாட்டத்திற்குத் தயாராகவும் ஒரு நேரம் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை. ... See MoreSee Less
View on Facebook
"மனமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அழைப்பு" - திருத்தந்தை லியோ திருத்தந்தை தனது மறையுரையில், தவக்காலம் என்பது உள்நோக்கிப் பார்க்கவும், மனமாற்றத்தைத் தழுவவும், பாஸ்காவில் வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் இறுதி கொண்டாட்டத்திற்குத் தயாராகவும் ஒரு நேரம் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.கடந்த 18 ஆம் தேதி புதன்கிழமை உரோமை புனித சபீனா பேராலயத்தில் நிகழ்த்திய திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரையில், .தவக்காலத்தின் போது மனந்திரும்புதல் மற்றும் சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ"மக்களை ஒன்று திரட்டுங்கள்" என்ற இறைவாக்கினர் யோவேலின் அழைப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை லியோ அவர்கள், இன்றைய உலகில் தனிப்பட்ட மற்றும் கூட்டு மனமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்."விசுவாசிகள் தங்கள் பாவங்களை வெளிப்புற அடையாளமாக அல்ல, மாறாக தங்கள் சொந்த இதயங்கள் மற்றும் செயல்களின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சவால்கள் இருந்தபோதிலும், தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்று, புதுப்பித்தலை நாடும் விசுவாசிகளின் சமூகத்தை உருவாக்குவதற்கு தவக்காலம் ஒரு வலிமை வாய்ந்த காலமாக உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.கடந்த 1966-ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் திருப்பலியை வெளிப்படையாகக் கொண்டாடிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, அதை "கடுமையான மற்றும் குறிப்பிடத்தக்க தவக்கால விழா" என்று அழைத்தார்.சாம்பலை, போர், சுற்றுச்சூழல் சிதைவு மற்றும் நீதி இழப்பு உள்ளிட்ட உலகின் கலவரங்களின் நினைவூட்டலுக்கு ஒப்பிட்டுக்காட்டிய திருத்தந்தை, அதேவேளையில், நம்பிக்கை மற்றும் உயிர்த்தெழுதலையும் அடையாளப்படுத்தினார்.தவக்காலம் என்பது உள்நோக்கிப் பார்க்கவும், மனமாற்றத்தைத் தழுவவும், பாஸ்காவில் வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் இறுதி கொண்டாட்டத்திற்குத் தயாராகவும் ஒரு நேரம் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை. ... See MoreSee Less
View on Facebook
தவக்கால சிறப்பு வழிபாட்டு தினங்கள். இவ்வழிபாடுகளில் அர்த்தமுள்ள வகையில் பங்கெடுத்து மனமாற்றமும் இறையிரக்கமும் இறை ஆசீரும் பெற ஆசிக்கிறோம். ... See MoreSee Less
View on Facebook
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில், யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.திருப்பலிக்கு பின்னர், சுன்னாகம் அந்தோனியார் ஆலய முன்பள்ளி ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்படும்.அனைவரும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தகவல் பங்குத்தந்தை ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top