தூய ஆவியார் பெருவிழா – சுன்னாகத்தில் ஆயத்த வழிபாடு

இளவாலை மறைக்கோட்ட அருட்பணியாளர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறும் தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடும் திருப்பலியும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் எதிர்வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை மாலை 6:00மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதன் பிரகாரம் மாலை 6:00 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து 7:00 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து 8:30 வரை தூய ஆவியார் வழிபாடும் இடம்பெறும் என தெரிவித்துள்ள சுன்னாகம் பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளார் இறையருள் பெற அனைவரையும் அழைத்துநிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top